பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

#Colombo #SriLanka #sri lanka tamil news #Lanka4 #buddhist_ pali university
Prathees
3 years ago
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர்களுக்கு  விசேட அறிவித்தல்

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்கும் போது மாணவர், பாதுகாவலர் அல்லது அறங்காவலர் பாதுகாவலரின் பெயருடன் வருவது கட்டாயம் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் திகதி முதல் பல்கலைக்கழகத்தை மூட முடிவு செய்யப்பட்டது.

பின்னர், இம்மாதம் 27ம் திகதி பல்கலைக்கழகத்தை திறக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி முதலாம் ஆண்டு மாணவர்களே முதலில் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தற்காலிகமாக கலைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4