உச்சநீதிமன்றத்தில் நாளை மற்றொரு முக்கிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

#Court Order #Election #SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamil
Prathees
3 years ago
உச்சநீதிமன்றத்தில் நாளை மற்றொரு முக்கிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவர் சமர்ப்பித்த ரிட் மனு நாளை (20) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாளை எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப் போவதாக உச்ச நீதிமன்ற வழக்குகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த 10ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, ​​அடுத்தகட்ட விசாரணையை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனவே குறித்த மனுவை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் அழைக்குமாறு கோரி கேணல் தனது சட்டத்தரணிகள் ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதன் பின்னணியில், இது தொடர்பான மனுவை நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4