நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்

#world_news #Breakingnews #ImportantNews #Tamilnews #NASA
Mani
3 years ago
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்

நிலவில் மனிதர்களை குடியேற்ற ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், அங்கு 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் சிலிக்கா, அலுமினியம், மேக்னிஷியம் ஆக்சைடுகள், இரும்பு போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளதாகவும் இந்த தாதுக்கள் அனைத்தும் ஆக்சிஜனை உள்ளடக்கியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரிகோலித் எனப்படும் நிலவின் மேற்பரப்பில் 1.4 டன் கனிமங்கள் உள்ளன.

இதில் 1 கன மீட்டருக்கு சுமார் 630 கிமீ ஆக்சிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் கூற்றுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு சுவாசிக்க சுமார் 800 கிராம் ஆக்சிஜன் தேவை. அதன்படி பார்த்தால் நிலவில் உள்ள ஆக்சிஜன் மூலம் அங்கு மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு வாழலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு ஆகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4