காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது யானை மிதித்ததில் இளைஞர் உயிரிழப்பு

#Death
Mani
1 year ago
காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது யானை மிதித்ததில் இளைஞர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டுயானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது யானை மிதித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

பாரூர் காட்டுகொலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார் இன்று காலை மோட்டுப்பட்டி அருகே உள்ள மலையடிவாரம் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, யானையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அகரம் அருகே மருதேரி பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ள நிலையில், யானைகளை விரட்ட இதுவரை வனத்துறையினர் வராததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.