2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் பரிசோதனை செய்த வடகொரியா

#NorthKorea #Missile #Japan #Ocean #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் பரிசோதனை செய்த வடகொரியா

அமெரிக்கா மற்றும் தென்கொரியா என இரு நாடுகளும் 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில், கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது. நேற்று தொடங்கிய இந்த பயிற்சியானது, வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதற்கு அதிரடி காட்டும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா, இன்று ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை செய்து உள்ளது. இதன்படி, குறுகிய தொலைவை சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா செலுத்தி உள்ளது.

இதுபற்றி தென்கொரிய ராணுவம் வெளியிட்ட செய்தியில், இன்று காலை வடகொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து காலை 7.41 மற்றும் 7.51 மணியளவில் 2 ஏவுகணைகளை வடகொரியா செலுத்தி உள்ளது. குறுகிய தொலைவில் சென்று இலக்கை தாக்க கூடிய அவை 620 கி.மீ. தொலைவுக்கு சென்றன என தெரிவித்து உள்ளது.

வடகொரிய ஏவுகணை பரிசோதனைபற்றி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பின்னர் கூறும்போது, வடகொரியா ஏவுகணை பரிசோதனை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். அதுபற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். இந்த பரிசோதனையால் பாதிப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறியுள்ளார்.

ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாஜூ ஹமடா இன்று கூறும்போது, 2 ஏவுகணைகளும் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் விழுந்தது போல் இல்லை என கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4