புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்

#School #School Student #Hospital #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்

அண்மையில், தெற்கில் உள்ள கிராமியப் பாடசாலையொன்றில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில்  இசை நாற்காலி போட்டியின் நடுவர் தீர்மானம் தொடர்பான தகராறில் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 10ஆம் வகுப்பு மாணவனை நாற்காலியால் தாக்கியுள்ளார்.

அதன்பின்இ 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களும் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் தாக்குதல்களால் மோதலை சமரசம் செய்ய தலையிட்ட பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் 4 மாணவர்களும் காயமடைந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மோதலை முடித்து புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4