அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

#Election #Election Commission #Ranil wickremesinghe #srilankan politics #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prabha Praneetha
3 years ago
அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி  அறிவிப்பு

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதோடு, அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக  தெளிவாகியுள்ளது .

சிறுபான்மை அரசியல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த வாரம் நடைபெற்ற சந்திப்பில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் விக்கிரமசிங்க அவர்களுக்குத் தெரிவித்தார்.

பொருளாதாரம் முன்னேற்றப் போக்கில் இருப்பதாகவும், எதிர்வரும் மாதங்களில் அது மேம்படும் என்றும் விக்ரமசிங்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்ததை ஒப்பிடும் போது நாடு சிறந்த நிலையில் இருப்பதாகவும், பொருளாதாரம் ஸ்திரமானவுடன் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் கலந்தாலோசித்து ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி  மேலும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிப்பதாகவும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் ரணில் கூறியுள்ளார் 

- தற்சமயம் பாராளுமன்றத்தில் தன்னிடம் எண்கள் இருப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு தெரிவிக்கிறார்

- சபையில் சமர்ப்பிக்கப்பட்ட IMF உடன்படிக்கைக்குப் பிறகு பாராளுமன்றம் ஒன்றாக வேலை செய்ய அழைப்பு விடுத்துள்ளது 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4