3வது நாளாக நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் மக்கள் அவதி

#hot #SriLanka #sri lanka tamil news #weather #Lanka4
Kanimoli
3 years ago
 3வது நாளாக நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் மக்கள் அவதி

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க நாளை (15ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதன்படி, பணியிடங்களில் பணிபுரிந்தால், வெளியில் வேலை செய்வதை கட்டுப்படுத்தி, முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்தால், குழந்தைகளை வாகனங்களில் கவனிக்காமல் விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும், மேலும் அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4