எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

#mahinda yappa abewardana #Parliament #TNA #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும்.

இதன்படி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புத்தாண்டின் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்றத்தின் கோட்பாடு புத்தகத்தில் உரிய சட்டத்தை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இந்தச் சட்டமூலம் கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும் பல கட்சிகளின் எதிர்ப்பினால் சமர்ப்பிக்கப்படவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4