முழங்காவில் பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு: சாரதி படுகாயம்

#Kilinochchi #Jaffna #GunShoot #Police #Investigation #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
முழங்காவில் பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு: சாரதி படுகாயம்

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் பொலிஸாரின் நடமாடும் சோதனையின் போது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் சாரதி (14) படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கார் யாழ்ப்பாணத்திலிருந்து முருங்கன் நோக்கி ஏ-32 பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த போது முழங்காவில் பகுதியில் நடமாடும் பொலிஸாரின் சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

அங்குஇ பொலிஸ்  அதிகாரிகளின் உத்தரவை மீறி காரை ஓட்டிச் செல்ல கார் சாரதி நடவடிக்கை எடுத்தபோது, ​​பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி  ஒருவர் காரை நிறுத்த குறைந்தபட்ச சக்தியைப் பயன்படுத்தி காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் சாரதி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், துப்பாக்கிச் சூடுகளை பொருட்படுத்தாமல், சாரதி தொடர்ந்து முருங்கனை நோக்கிச் சென்றதால், முருங்கன் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யாழ்.மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளதுடன், தொடர்ந்து காரை ஓட்டிச் சென்றமை மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் முழங்காவில் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4