போர் நிறுத்தத்தை மீறி சூடானில் தாக்குதல் நடத்திய துணை ராணுவப்படை

#Sudan #Military #War #Hospital #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
போர் நிறுத்தத்தை மீறி சூடானில் தாக்குதல் நடத்திய துணை ராணுவப்படை

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. 

தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள். ஆனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறுகிறார்கள். 

உம்துர்மன் நகரில் இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ளது. 

இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மீறி இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 

அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்று உம்துர்மன் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4