நாட்டின் தற்போதைய நிலக்கரி தேவை பூர்த்தி செய்யப்பட்டது

#SriLanka #Lanka4 #Coal #நிலக்கரி #Tamilnews #sri lanka tamil news
Prathees
3 years ago
நாட்டின் தற்போதைய நிலக்கரி தேவை பூர்த்தி செய்யப்பட்டது

இலங்கை மின்சார சபை எழுத்துமூலம் கோரியவாறு ஏற்கனவே 30 கப்பல்கள் நிலக்கரி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 28 மற்றும் 29 ஆகிய கப்பல்களின் தரையிறங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். 

 நாட்டின் நிலக்கரி தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீண்டும் நிலக்கரி கொண்டுவரும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள 30 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்களுக்கு மட்டுமே முழுமையாக பணம் செலுத்தப்பட்டு எஞ்சிய 8 கப்பல்கள் கடன் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

 எவ்வாறாயினும், செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். 

 சாதாரண முறையில் கடன் கடிதம் மூலம் குறைந்த விலையில் நிலக்கரியை பெற முடியும் என எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4