தினேஷ் ஷாஃப்டரின் காரில் காணப்பட்ட இரத்த மாதிரி யாருடையது என்பதனை அறிந்துக்கொள்ள எடுக்கப்பட்ட முடிவு

#SriLanka
Kanimoli
3 years ago
தினேஷ் ஷாஃப்டரின் காரில் காணப்பட்ட இரத்த மாதிரி யாருடையது என்பதனை அறிந்துக்கொள்ள எடுக்கப்பட்ட முடிவு

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் காரில் காணப்பட்ட இரத்த மாதிரி யாருடையது என்பதனை அறிந்துக்கொள்வதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் சிலரின் இரத்த மாதிரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இனுடைய உத்தரவிற்கு அமைய குறித்த இரத்த மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. தொழிலதிபர் தினேஷ் சாஃப்டரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த போது கடமையாற்றிய 10 பேரிடமே இரத்த மாதிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

 மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4