இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிப்பேரை அச்சுறுத்தும் பொருளாதாரம்!

#SriLanka #people #economy
Mayoorikka
3 years ago
இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிப்பேரை அச்சுறுத்தும் பொருளாதாரம்!

இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 52 வீதமானவர்கள், தமது வீடுகளின் நல்வாழ்வுக்குப் பொருளாதாரக் காரணிகளே பிரதான அச்சுறுத்தல் என்பதை அங்கீகரிப்பதாக அண்மைய ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

 நாட்டின் சனத்தொகையில் 22.7 வீதமானவர்கள் வீட்டுத் தேவைகளுக்குப் போதிய வருமானத்தை ஈட்ட முடியவில்லை எனவும் மேலும் 17 வீதமானோர் வாழ்க்கைச் செலவு மற்றும் அது தொடர்பான பொருளாதாரப் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

 நாட்டின் 13 சதவீத மக்கள் வேலையின்மையால் அவதிப்படுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் பெடரல் வெளிவிவகார அலுவலகம், இலங்கையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஜேர்மன் நிறுவனம், இலங்கை காற்றழுத்தமானி திணைக்களம் மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4