கொழும்பு வீதியில் புகை மூட்டங்கள் சூழ்ந்துள்ளதால் சாரதிகளை அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு வேண்டுகோள்
#SriLanka
Kanimoli
3 years ago
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் புகை மூட்டங்கள் சூழ்ந்துள்ளதால் சாரதிகளை மிகவும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் ஹட்டன் முதல் கித்துல்கலை வரையிலான, வட்டவளை, கினிகத்தேனை ஆகிய பகுதிகளிலேயே அடர்த்தியான புகை மூட்டங்கள் சூழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பகல் வேளையிலும் வாகனத்தின் மின் விளக்குகளை ஒளிரச் செய்து பயணிக்குமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே