மீண்டும் பார்சிலோனா கழகத்துடன் இணையவுள்ள உலக கால்பந்தாட்ட சாம்பியன் லியோனல் மெஸ்ஸி

#football #Player
Prasu
3 years ago
மீண்டும் பார்சிலோனா கழகத்துடன் இணையவுள்ள உலக கால்பந்தாட்ட சாம்பியன் லியோனல் மெஸ்ஸி

உலக கால்பந்தாட்ட சாம்பியனான லியோனல் மெஸ்ஸி தற்போதைய அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து பிரபல பார்சிலோனா கால்பந்து அணியுடன் ஒப்பந்தம் செய்ய தயாராகி வருவதாக சர்வதேச கால்பந்து வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பார்சிலோனா கால்பந்து கழகத்தின் தலைவர் ஜோன் லபோர்டா, மெஸ்ஸியை பார்சிலோனா அணியுடன் விளையாட சம்மதிக்க தானும் தனது அணியும் முயற்சித்து வருவதாக கூறுகிறார்.

 ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக மெஸ்ஸிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பார்சிலோனா தலைவர் கூறினார்.

 பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து கழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடிய மெஸ்ஸி, இந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த கழகத்துடனான தனது இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தை முடிக்கிறார். ஒப்பந்தம் முடிந்தவுடன் மெஸ்ஸி தனது வழக்கமான அணியான பார்சிலோனாவில் மீண்டும் இணைவார் என்று பார்சிலோனா ரசிகர்களும் அதன் நிர்வாகமும் நம்புகின்றனர்.

35 வயதான கால்பந்து சூப்பர் ஸ்டார் அர்ஜென்டினாவில் பிறந்த மிகவும் திறமையான கால்பந்து வீரராக கருதப்படுகிறார். ஆனால் பார்சிலோனா கழகம் தனக்கு தகுதியானதை கொடுக்கவில்லை என கூறி 2021ம் ஆண்டு பார்சிலோனாவை விட்டு அவர் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4