மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

#SriLanka #Student #Tamilnews
Prabha Praneetha
3 years ago
மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 இன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சை நோக்கி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 அரச மருத்துவ பீடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரியும் புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பட்டது.

 இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4