கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை: கூட்டமைப்பு கண்டனம்

#SriLanka #M. A. Sumanthiran #Canada #government
Mayoorikka
3 years ago
கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை: கூட்டமைப்பு கண்டனம்

கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கு கனேடிய உயர்ஸ்தானிரை அழைத்து அரசாங்கம் தமது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

 தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஏ.ஏ.சுமந்திரன் இந்த கன்னடனத்தினை தெரிவித்துள்ளார்.

 இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளாத சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடுவதில் எந்தவொரு நியாயமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4