எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையிடம் இழப்பீடு கோரும் இந்திய அரசாங்கம்

#SriLanka #Lanka4 #wijayadasa rajapaksha #Ship
Kanimoli
3 years ago
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையிடம் இழப்பீடு கோரும் இந்திய அரசாங்கம்

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலும், நியூ டயமண்ட் கப்பலும் ஆபத்தில் சிக்கிய போது வழங்கிய உதவிக்காக இந்திய அரசாங்கத்திற்கு 890 மில்லியன் இந்திய ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 “முதன்மையாக, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க எங்கள் கோரிக்கையின் பேரில் பணியாற்றின. சுற்றுச்சூழல் பாதிப்பு மேலும் தீவிரமடையாமல் தடுக்க பங்களிப்பு குறித்து இந்திய கடற்படை, எங்களிடம் 400 மில்லியன் இந்திய ரூபாய் கேட்டுள்ளனர். 

 இலங்கை மதிப்பில் 1,400 மில்லியன்கள். இது வதந்திகள் அல்ல. அனுப்பிய ஆவணமும் கோப்பில் உள்ளது. அதை அனுப்புகிறேன். எக்ஸ்பிரஸ் பேர்லுக்கு 490 இந்திய ரூபாயும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு 400 இந்திய ரூபாயும்..”எனத்தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4