உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர இந்த பொருளை சுவாமி அறையில் வைத்துப் பாருங்கள்.

#spiritual #Home #Lanka4 #ஆன்மீகம் #வீடு #பணம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர இந்த பொருளை சுவாமி அறையில் வைத்துப் பாருங்கள்.

உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கையில் உங்கள் வீட்டிலும் இந்த பண நெருக்கடி கட்டாயம் வந்திருக்கும். 

இதனை வெற்றிகொள்ள நீங்கள் இன்று வெள்ளிக்கிழமை இந்த பொருளை சாமி அறையில் வைத்து வணங்கி வாருங்கள். அதன் பின் இந்த நெருக்கடி நிலைக்கு உங்களுக்கு தீர்வு கிட்டலாம்.

வீட்டில் வாஸ்து சரியில்லாமல் இருப்பதும் சில சமயங்களில் காரணமாக இருக்கலாம். நாம் எத்தனையோ கோவிலுக்கு சென்று, எத்தனையோ தெய்வங்களை வணங்கி, பூஜைகள், மந்திரங்கள் சொன்னாலும் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

 அப்படி பிரச்சனைகள் தீர வேண்டும், பணம் வந்து கொண்டே இருக்க வேண்டுமானால் முதலில் குல தெய்வத்தின் அருள் தேவை. குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே நமது இஷ்ட தெய்வம் உள்ளிட்ட பிற தெய்வங்களின் அருள் கிடைக்கும். 

ஆனால் நாம் வாழும் வீட்டின் அமைப்போ ஏதோ ஒன்று சரியில்லாமல் இருந்தால் குல தெய்வத்தின் அருள் கிடைப்பதில் கூட தடை ஏற்படும். ஆனால் வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில், குறிப்பாக வீட்டின் பூஜை அறை, பணம் சேமிக்கும் இடம் ஆகியவற்றில் மங்கலங்களை, நேர்மறை மற்றும் தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வைத்தாலே, வீட்டில் அள்ள அள்ள குறையாக செல்வம் வந்து கொண்டே இருக்கும்.

அப்படி வீட்டின் பூஜை அறையில் எந்த பொருளை, எப்படி வைத்தால் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதே இங்கே பார்க்கலாம்.

 ஒரு சிறிய மண் கலசம் அல்லது மண் குவளையை வாங்கி, அதில் கல் உப்பை நிரப்பிக் கொள்ள வேண்டும். அந்த உப்பிற்கு நடுவே சிறிய அளவு வசம்பு துண்டினை வைத்து, அதன் மேல் உப்பை வைத்து மூடி விட வேண்டும்.

வசம்பு வெளியில் தெரியாத படி முழுவதும் மூழ்கும் படி உப்பை வைத்து நிரம்பி விட வேண்டும். பிறகு அந்த குவளையின் மீது வெள்ளை நிற மார்க்கரால் 520 என்ற எண்ணை மேலாகவும், அதற்கு கீழ் 741 என்று எண்ணையும் எழுத வேண்டும். 

இந்த குவளையை யார் கண்ணிலும் படாதவாறு, சுவாமி படங்களுக்கு பின்னால் மறைத்து வைத்து விட வேண்டும். எண்கள், மந்திரங்களுக்கு ஒப்பானதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ இந்த குவளையை எடுத்து, அதிலுள்ள உப்பு மற்றும் வசம்பை மாற்றி விட்டு, வேறு உப்பு, வசம்பு ஆகியவற்றை வைத்து, யார் கண்ணிலும் படாமல் வைத்து விட வேண்டும்.

 இப்படி தொடர்ந்து செய்வதால் வீட்டில் பணம் வந்து கொண்டே இருக்கும். நாம் செலவு செய்த பணம் கூட பல மடங்காக நம்மிடம் திரும்பி வந்து விடும். வீண் விரயங்கள் ஏற்பட்டு சேமிப்பு கரைவதும் இருக்காது.

 உப்பு, கடலில் இருந்து பெறப்படுகிறது. திருமாலின் துணைவியான மகாலட்சுமி பாற்கடலை கடையும் போது தோன்றியவள். அதனால் அவளின் பிறப்பிடமும் கடலாகும். இதன் காரணமாகவே உப்பு, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இதற்கு நேர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. 

ஆகவே வசம்பிற்கும் ஒருவகை ஈர்க்கும் தன்மை உண்டு. அது பணம் சேமிக்கும் இடம் அல்லது பெட்டகத்தில் வைத்து இது போன்று செய்து வந்தால் செல்வக்குறைவு இல்லாம் செல்வம் சேர்ந்த வண்ணமிருக்கும்.