புத்தளத்தில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியர்!

#SriLanka #School #Attack #Lanka4 #இலங்கை #தாக்குதல் #லங்கா4
புத்தளத்தில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் தாக்கப்பட்ட  ஆசிரியர்!

புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நீதிமன்றில் தீர்ப்புக்குள்ளானது.

அதாவது புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 பாடசாலை மாணவர்கள் இன்று நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

 மே 23 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மற்றும் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரை தாக்கியதற்காக நான்கு மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர், மேலும் சில 17 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கடுமையான ஜாமீன் நிபந்தனைகளுடன் இன்று நீதவான் நீதிமன்றத்தினால்விடுவிக்கப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4