தேங்காய் எண்ணெயால் விளக்கேற்றுவதனால் வழிபாட்டிலிருக்கும் தவறுகள், பிழைகள் நீங்கும்.

#spiritual #worship #Coconut #Lanka4 #Oil #ஆன்மீகம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
தேங்காய் எண்ணெயால் விளக்கேற்றுவதனால் வழிபாட்டிலிருக்கும் தவறுகள், பிழைகள் நீங்கும்.

எந்த சுபகாரியங்களுக்கும் நாம் வழிபடும் போது  விளக்கேற்றி வழிபடுவது மிக முக்கியமானதாகும். அது இந்துக்களாகிய நமது கடமையும் கூட.

சாதாரணமாக நாம் வழிபடுவதை விட விளக்கேற்றி வழிபடும் போது அதன் பலன் பல மடங்காக அதிகரிக்கும். விளக்கேற்றுவதில் பல முறைகள் உள்ளன.

இவைகள் ஏற்றப்படும் விளக்கு எந்த பொருளால் செய்யப்பட்டது, என்ன திரியால் விளக்கு ஏற்றுகிறோம், எந்த திசையில் ஏற்றுகிறோம், என்ன எண்ணெய்யை பயன்படுத்தி ஏற்றுகிறோம் என்பது மிக மிக முக்கியம்.

அதற்கு ஏற்ப இவற்றின் பலன்கள் மாறுபடும். வீடுகளில் விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்ற எண்ணெய்களால் விளக்கேற்றுவது நல்லது. கடலை எண்ணெய்யில் விளக்கேற்றக் கூடாது. பஞ்ச கூட்டு எண்ணெய்யை பயன்படுத்தி கோவில்களில் மட்டுமே விளக்கேற்ற வேண்டும்.

 வீடுகளில் இந்த எண்ணெய்யை கொண்டு விளக்கேற்றினால் கலகம் ஏற்படும். இதே போல் தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றும் பழக்கம் உண்டு. பொதுவாக விநாயகருக்கு தேங்காய் எண்ணெய்யால் விளக்கேற்றுவது சிறப்பானது.

இப்படி ஏற்றுவதன் மூலம் விநாயகரின் பரிபூரண அருளை பெற முடியும். சாதாரணமாக தேங்காய் எண்ணெய்யில் அகலில் விட்டு விளக்கேற்றுவதை விட, தேங்காயில் விளக்கேற்றுவது இன்னும் சிறப்பானது.

 நல்ல தேங்காயை எடுத்து இரண்டாக உடைந்து, வீட்டில் இரண்டு இலைகளில் பச்சரிசி வைத்து, அதன் மீது தேங்காயை நிற்க வைக்க வேண்டும். இதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியிட்டு, விநாயகருக்கு உரிய சதுர்த்தி திதியில் விளக்கேற்ற வேண்டும்.

 இந்த விளக்கை நாமாக அணைக்கக் கூடாது. அதுவாக முற்றிலுமாக எரிய வேண்டும். திரி முழுவதுமாக எரிந்து, தேங்காய் எண்ணெய்யுடன் தேங்காயும் எரிய துவங்கும். அப்போது ஏற்படும் நறுமணம் மிகவும் நல்லது. இது நாம் வழிபாட்டின் போது தெரியாமல் ஏதாவது தவறு செய்து, அதனால் ஏதாவது தோஷம் ஏற்பட்டிருந்தால் கூட சரி செய்து விடும்.

வீட்டில் பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த வீடு சுபிட்சமாக இருக்க முடியும். ஒருவேளை ஏதாவது ஒரு பூதத்தின் சக்தி சரியாக இயங்காமல் இருந்தால் கூட அதை ஈர்த்து, பஞ்சபூதங்களின் ஆற்றலை வீட்டில் நிலைப்படுத்தும் தன்மை தேங்காய் தீபத்திற்கு உண்டு.

விவகாரமான பல பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஆற்றல் தேங்காய் விளக்கிற்கு உண்டு. இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களின் மிக முக்கியமாக, கண்டிப்பாக பயன்படுத்தப்படும் பொருள் என்றால் அது வாழைப்பழமும், தேங்காயும் தான். 

இவை இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களில், புனிதமான பொருட்களாக கருதப்படுகின்றன. அது மட்டுமல்ல வேறு எந்த காய்க்கும் இல்லாத சிறப்பாக தேங்காயில் மட்டுமே மூன்று கண்கள் உள்ளன. இது சிவ பெருமானின் அம்சமாக கருதப்படுவதுடன் மூன்றாவது கண் என்பது நம்முடைய ஞானத்தை குறிக்கக் கூடியது.

ஆன்மிகத்தின் நோக்கமே ஞானத்தை பெற வேண்டும் என்பது தான். அப்படி மனத்தை தெளிவாக்கி, ஆன்மிக உணர்வையும், இறைவனின் தெய்வீக தன்மையையும் நாம் உணர செய்வதாகும். 

விநாயகப் பெருமான் ஞானத்தை அளிக்கக் கூடியவர். அதனால் தான் அவரின் முழு அருளையும் பெறுவதற்கு தேங்காயிலோ அல்லது தேங்காய் எண்ணெயிலோ விளக்கேற்றுகிறார்கள்.

தெரியாது நீங்களும் விளக்கேற்ற வேறு எண்ணெய் பயன்படுத்தினால் இன்றே தேங்காய் எண்ணெய்க்கு மாறி சகல சௌபாக்கியங்களையும் அடையுங்கள்.