குருநாகல் போதனா வைத்தியசாலையில் மீண்டும் தனது பணியை ஆரம்பித்த வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன்

#SriLanka #Hospital #doctor #kurunagala
Prasu
3 years ago
குருநாகல் போதனா வைத்தியசாலையில் மீண்டும் தனது பணியை ஆரம்பித்த வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன்

சில அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமைகளை ஏற்றுள்ளார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் தொடர்பான சிரேஷ்ட அதிகாரியாக வைத்தியர் ஷாபி மீள நியமிக்கப்பட்டுள்ளார்.

 வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழு அண்மையில் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தது.

அவர் முன்பு சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தார்.

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழுவின் செயலாளர், சுகாதார செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், “வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுத்து மற்றும் வாய்மொழி ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்படாததால், அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத்” தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4