டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவிப்பு

#SriLanka #prices #Bus #Lanka4 #petrol
Kanimoli
3 years ago
டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவிப்பு

டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், எனவே உதிரி பாகங்கள் மற்றும் டயர்களின் விலையை குறைக்கும் வேலைத்திட்டம் தேவை எனவும் அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 பேருந்துகளில் பயன்படுத்தப்படும் பேட்டரி ஒன்றின் விலை 35,000 ரூபாவிலிருந்து 80,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், டயரின் விலை 1 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார். ஒரு டயர் நிரப்புவதற்கு 25,000 ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாகவும், சில உதிரி பாகங்களின் விலை 500% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 கடந்த காலங்களில் டீசல் விலை குறைப்பு தொடர்பில் பேரூந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பேரூந்து வருமானம் குறைந்ததாகவும், ஆனால் பேரூந்துகளின் பராமரிப்புக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

 எதிர்காலத்தில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேரூந்து கட்டணத்தை திருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பேரூந்து உதிரி பாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் விலையை குறைக்கும் வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4