வெளியாகியது விசேட வர்த்தமானி: பல நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

#SriLanka #government #Gazette
Mayoorikka
2 years ago
வெளியாகியது விசேட வர்த்தமானி: பல நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

இலங்கையில் பல நிறுவனங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 2023 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை அரசியலமைப்பின் 44 ஆவது சட்டத்தின் (1) கீழ் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் உட்பட பல நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த நிறுவனங்கள் வருமாறு 

 1. ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் 

 2. கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் 

 3. நார்த் சீ லிமிடெட். 

 4. இலங்கை திரிபோஷ கோ. லிமிடெட்.

 5. கலோயா பிளான்டேஷன் (பிரைவேட்) நிறுவனம்

 6. நேஷனல் சால்ட் லிமிடெட் 

 7. இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம்

 8. பரந்தன் கெமிக்கல்ஸ் லிமிடெட் 

 9. BCC (Pvt.) Limited

 10. மாநில பொறியியல் கழகம் 

 11. மஹிந்த ராஜபக்ச தேசிய டெலி சினிமா பூங்கா 

 12. லங்கா ஜெனரல் டிரேடிங் கம்பெனி லிமிடெட்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!