இலங்கை இராணுவம் எதிர்காலத்தில் வெடிமருந்துகளை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்

#SriLanka #Weapons #Lanka4 #Sri Lankan Army #sri lanka tamil news
Prathees
3 years ago
இலங்கை இராணுவம் எதிர்காலத்தில் வெடிமருந்துகளை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்

இலங்கை இராணுவம் எதிர்காலத்தில் தமது சொந்த உபயோகத்திற்காக இலகுரக ஆயுதங்களுக்கான பலவகையான ரவைகளை தயாரிக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 வேயங்கொடவில் உள்ள இராணுவ ஆயுதக் கைத்தொழில் (AOI) க்கு ஆய்வு விஜயம் செய்த பின்னர் அமைச்சர் பேசுகையில், 

 இந்த முக்கியமான இராணுவ சொத்தை அபிவிருத்தி செய்வதற்கும் வெடிமருந்து வகைகளையும் உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 "இந்த வசதியைப் பயன்படுத்தி இராணுவத்தின் இலகுரக ஆயுதங்களுக்கான நேரடி வெடிமருந்துகளைத் தயாரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

 இதற்கிடையில்,வேயங்கொடையில் உள்ள இராணுவ ஆயுதக் கைத்தொழில் நிலையத்தில், T-56 ரக துப்பாக்கி, 9mm துப்பாக்கி மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கிக்கான நேரடி வெடிமருந்துகளை முதலில் தயாரிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

 "ஆரம்பத்தில், தயாரிப்புகள் இராணுவ பயன்பாட்டிற்காக இருக்கும், பின்னர் நாங்கள் மேலும் விரிவுபடுத்தவும், மற்ற படைகளுக்கும் நேரடி வெடிமருந்துகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

 இந்த வளாகத்தில் இராணுவத்தினருக்கான உடல் கவசம், போர் ஹெல்மெட், பூட்ஸ், அதிகாரிகளின் காலணிகள், சின்னங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த இராணுவப் பேச்சாளர், பெருமளவிலான பணத்தைப் பயன்படுத்தி இராணுவத்தின் பாவனைக்காக பெருமளவான வெடிபொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4