புதிய சட்டத்தின் மூலம் 33 ஊடக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
புதிய சட்டத்தின் மூலம் 33 ஊடக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து

அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் சட்டமானதை அடுத்து தற்போதுள்ள அனைத்து ஊடக ஒலிபரப்பு நிறுவனங்களின் உரிமங்களும் ஆறு மாதங்களுக்குள் இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 இலங்கையில் தற்போது 33 ஒலிபரப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன, அவை வானொலி கூட்டுத்தாபன சட்டம் மற்றும் தொலைக்காட்சி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இயங்குகின்றன.

 உத்தேச சட்டம் அமுல்படுத்தப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் இந்த ஒளிபரப்பாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு உரிமங்கள் திரும்பப் பெறப்படுமா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.

 இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற வளாகத்தில் அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தில், வருடத்திற்கு ஒருமுறை அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க வேண்டியதன் மூலம் ஊடக சுதந்திரம் மறைமுகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4