அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை

#SriLanka #weather #Rain #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை

கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 தற்போது தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இந்த கனமழை நிலைமை இன்னும் 3 நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 எனினும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அவ்வளவாக பெய்யவில்லை என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4