மருத்துவ உபகரணங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டுகள்

#SriLanka #Hospital #scan #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
மருத்துவ உபகரணங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டுகள்

எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரங்கள், சி.டி ஸ்கேன் இயந்திரங்கள் உட்பட பல வைத்தியசாலைகளில் உள்ள மருத்துவ உபகரணங்கள் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் செயலிழந்து சுமார் 03 மாதங்களாகியுள்ளதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

 நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்களில் பிரச்சினைகள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4