உலகக் கோப்பையை விட ஐபிஎல்-ஐ வெல்வது கடினம் என சவுரவ் கங்குலி

#India Cricket #IPL #Cricket #sports #Tamilnews #ImportantNews #Sports News
Mani
3 years ago
உலகக் கோப்பையை விட ஐபிஎல்-ஐ வெல்வது கடினம் என சவுரவ் கங்குலி

லண்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறிவருகிறார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. இந்நிலையில், ரோகித் சர்மாவின் திறமை மீது எந்த சந்தேகமும் இல்லை, அவர் மீது நம்பிக்கை இருக்கிறது என்று ஆதரவு குரல் கொடுத்துள்ளார் சவுரவ் கங்குலி.

ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, “விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறிய பிறகு இந்திய அணிக்கு கேப்டன் தேவைப்பட்டார். அந்த நேரத்தில் ரோகித் சர்மா சிறந்தவராக தெரிந்தார். 5 ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியதோடு சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டார். அதனால் தான் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஆசிய கோப்பையை வென்ற ரோகித் சர்மா இந்திய அணியின் சிறந்த தேர்வாக மாறினார். அவர் தலைமையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிவரை இந்தியா சென்றுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் தோல்வியடைந்தோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4