சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெயை தானம் கொடுப்பதால் அற்புத பலன் கிடைக்கும். இது போன்று மேலும் பல...

#spiritual #Saturn #Lanka4 #ஆன்மீகம் #லங்கா4 #சனிபகவான் #சமாதானம் #donate
Mugunthan Mugunthan
10 months ago
சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெயை தானம் கொடுப்பதால் அற்புத பலன் கிடைக்கும். இது போன்று மேலும் பல...

மனித வாழ்க்கையில் துன்பங்கள், பணக்கஷ்டங்கள், பிணிகள், என்பன வருவது இயற்கை. இவற்றிற்கெல்லாம் நமது நவகிரகங்களின் இயக்கங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருவரின் ஜாதகத்தில் நவகிரகங்கள் இருக்கும் இடங்கள், அவற்றின் இயக்கங்களை பொறுத்தே அந்த நபரின் வாழ்க்கையில் சுக - துக்கங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 

நவகிரகங்களை போற்றும் விதமாக வாரத்தின் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியதாக சொல்லப்படுகிறது. ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் அவற்றில் மனித வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது சனி பகவான் தான். 

சனாதன தர்மத்தின் படி சனி பகவான், நீதி தேவன் என குறிப்பிடப்படுகிறார். இவர் அளவில்லாத கஷ்டங்களை கொடுத்து, அவற்றின் மூலம் பல அனுபவங்களை கொடுத்து, வாழ்க்கையை புரிய வைத்து, பிறகு நன்மைகளை வழங்கக் கூடியவர் ஆவார்.

 சனிக்கிழமையில் கடுகு எண்ணெய்யை தானம் கொடுப்பது அல்லது கடுகு எண்ணெய்யை பயன்படுத்துவது மிக அற்புதமான பலனை தரும். சனி பகவானால் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தடையை சந்தித்திருந்தாலும் சனிக்கிழமையில் கடுகு எண்ணெய்யை தானம் கொடுத்தால் அத்தனை தடைகளும் விலகி ஓடி விடும்.

 சனிக்கிழமையன்று ஒரு இரும்பு பாத்திரத்தில் கடுகு எண்ணெய்யை எடுத்து, அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அதில் உங்களின் முகத்தை பார்க்க வேண்டும். அல்லது அந்த எண்ணெய் இருக்கும் பாத்திரத்தை அரச மரத்தடியில் சிறிது நேரம் வைத்து விட்டு, அந்த எண்ணெய்யை யாராவது ஒரு ஏழைக்கு தானமாக கொடுத்து விடலாம்.

 நீண்ட நாட்களாக ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்த பிறகும் நோய் குணமாகவில்லை என்றால் சனிக்கிழமைகளில் மாலை வேளையில் இல்லாதவர்களுக்கு கருப்பு நிரத்தில் செருப்பு வாங்கி கொடுத்து, அவர்களின் ஆசியை பெறலாம். 

இதனால் நோயின் பாதிப்பில் இருந்து நீங்கள் விரைவில் விடுபடுவதுடன், உங்களின் உடல் நலமும் படிப்படியாக முன்னேறும். சனிக்கிழமையில் இரும்பு பாத்திரங்களை தானமாக கொடுப்பது மிகவும் புண்ணியமான விஷயமாகும்.

 அடிக்கடி விபத்துக்களில் சிக்குகிறீர்கள் என்றால் சனிக்கிழமையில் இல்லாதவர்களுக்கு ஏதாவது ஒரு இரும்பு பாத்திரத்தை தானமாக கொடுக்கலாம். இப்படி செய்வதால் விபத்துக்கள் இல்லாத பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம்.

 நீங்கள் பணம் தொடர்பான பிரச்சனையை சந்திதஅது கொண்டிருந்தால் சனிக்கிழமையில் 1.25 கிலோ கருப்பு உளுந்து அல்லது கருப்பு எள் வாங்கி தானமாக கொடுக்கலாம்.

 இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் செய்ய வேண்டும். இந்த பொருட்களை தானமாக கொடுக்க துவங்கிய பிறகு, இந்த பொருட்களை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. 

இப்படி செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் இருந்து பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் விலகி ஓடி விடும்.

 எந்த வகை பரிகாரமாக இருந்தாலும் குதிரைவாலிக்கு முக்கிய இடம் உண்டு. குதிரைவாலியை நல்லெண்ணெய்யில் வெள்ளிக்கிழமை இரவே ஊறவைத்து, சனிக்கிழமையில் வீட்டின் நிலை வாசல் கதவில் குதிரையின் பாதம் போல் யூ வடிவில் வைக்க வேண்டும். 

இப்படி செய்வதால் வீட்டில் உள்ளவர்களுக்கு சனியின் பாதிப்பால் ஏற்படும் உடல்நலக்குறைவு சரியாகும். வீட்டில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

எனவே நீங்களும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து மேற்கூறியவாறு உங்கள் கஷ்டத்திற்கேற்ப தானம் கொடுப்பதால் உங்கள் பிரச்சினைகள் தீர இடமுண்டு.