முத்துராஜா தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான காரணம்

#SriLanka #Elephant #Lanka4 #Thailand #sri lanka tamil news
Prathees
3 years ago
முத்துராஜா தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான காரணம்

தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக் சூரின்" அல்லது முத்து ராஜா யானை ஜூலை 1 ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தேசிய விலங்கியல் துறை தெரிவித்துள்ளது.

 தாய்லாந்தில் இருந்து வரும் விசேட விமானம் மூலம் இந்த யானை மீட்கப்பட உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகந்தா தெரிவித்தார்.

 2001ஆம் ஆண்டு சக் சுரின் என்ற இந்த யானையை இலங்கைக்கு வழங்க தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

 ஆனால் இந்த யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அதனை தாய்லாந்திற்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

 அளுத்கம கோவிலில் பராமரிக்கப்பட்டு வந்த சக் சுரின் என்ற யானை தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லுமாறு கோரியதையடுத்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 கடந்த நவம்பரில் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்ட சக்சுரின் யானையின் உடல்நிலையை பரிசோதிக்க தாய்லாந்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஒரு யானை வளர்ப்பாளர் குழு இலங்கை வந்தது. 

 கடந்த வாரமும் தாய்லாந்தில் இருந்து ஒரு குழு யானையின் உடல்நிலையை பரிசோதிக்க இலங்கைக்கு வந்தது.

 மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட போது யானையின் இரண்டு கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் முன் காலில் மற்றுமொரு காயம் இருந்ததாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.

 இதேவேளை, இந்த நாட்டில் வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் செயற்பாடுகள் பலவீனமான மட்டத்தில் இருப்பதை இவ்வாறான சம்பவங்கள் உறுதிப்படுத்துவதாக சூழலியலாளர் சஜீவ சாமிகர தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4