குறிஞ்சிப்பாடி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை பக்தர்கள் வழிபாடு
#Tamil Nadu
#Temple
#spiritual
#ஆன்மீகம்
Mani
10 months ago
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி விழப்பள்ளத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக, சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் போன்ற பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும், சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, சாமி வீதி உலா நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் புது விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள புது சுப்ரமணிய சுவாமி கோயிலிலும் கிருத்திகை வழிபாடு நடத்தப்பட்டது.