இந்த வருடத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு

#SriLanka #Colombo #Lanka4 #Foriegn
Kanimoli
3 years ago
இந்த வருடத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு

41 நாடுகளில் இருந்து 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிப்பத்திரங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வருடத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 தொழில்சார் திறன் மற்றும் மொழித்திறன் ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளுக்கு பணியாளர்களை பரிந்துரைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

 திறன் மற்றும் மொழித்திறனை வளர்த்து இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு செயற்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4