தியாகேந்திரன் வாமதேவா அவர்களால் யாழ். கல்விவலய மாணவர்கள் 50 பேருக்கு புலமைப்பரிசில்

#SriLanka #Jaffna #Lanka4 #இலங்கை #யாழ்ப்பாணம்
தியாகேந்திரன் வாமதேவா அவர்களால் யாழ். கல்விவலய மாணவர்கள் 50 பேருக்கு புலமைப்பரிசில்

இன்று யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. M. இராதாகிருஷ்ணன் அவர்கள் யாழ். துர்க்காதேவி மண்டபத்தில் மணிவிழாவைக் கொண்டாடினார். அந்த வைபவத்தில் திரு. தியாகேதந்திரன் வாமதேவா அவர்கள் தனது தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் மூலம் 50 அவ்வலய மாணவர்களுக்கு மாதாந்த புலமைப் பரிசில் வழங்கிவைத்தார்.

கல்விப்பணிப்பாளர் மணிவிழாவில் திரு. தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் மாணவர்கள் 50 பேருக்கும் இம்மாதம் முதல் மாதாந்த உதவித்தொகை கிடைக்க ஆவன செய்துள்ளதுடன் அது அவர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கவும் உள்ளார்.

இந்த நிகழ்வில் இன்றைய தினம் TCT நிர்வாக உத்தியோகத்தர்கள் அரங்கில் வைத்து பிள்ளைகளுக்கு நேரடியாக அந்த உதவித்தொகையை வழங்கினார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4