மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை குறித்து கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை குறித்து கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

2023-2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை குறித்து கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி நாட்டின் 15வது மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

இந்நிலையில், தற்போது கணக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது 10 ஆண்டுகள் ஒருமுறை நடத்தப்படும். இறுதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4