இன்று முதல் கண்காணிக்கப்படவுள்ள பீடித் தொழில் தொடர்பான இடங்கள்

#SriLanka
Prathees
2 years ago
இன்று முதல் கண்காணிக்கப்படவுள்ள பீடித் தொழில் தொடர்பான இடங்கள்

நாடளாவிய ரீதியில் பீடித் தொழில் தொடர்பான இடங்கள் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கண்காணிக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டியவர்களை இனங்கண்டு, வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இது மேற்கொள்ளப்படும் என மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

 மேலும் ஒரு பீடிக்கு இரண்டு ரூபாய் மதுவரி வசூலிக்கும் முன்னேற்றம் திருப்தி அடையாததால், சம்பந்தப்பட்ட இடங்களை ஒரு மாத காலம் கண்காணிப்பதாக அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4