பிரமிட் திட்டம் மூலம் பண மோசடி செய்த 6 பேர் வெளிநாடு செல்ல தடை

#SriLanka #Court Order
Prathees
2 years ago
பிரமிட் திட்டம் மூலம் பண மோசடி செய்த 6 பேர் வெளிநாடு செல்ல தடை

சட்டவிரோத பிரமிட் திட்டம் மூலம் பணம் மோசடி செய்யப்பட்டதாக ONMAX DT (PVT) LTD இன் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கும் ஆறு பேரின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்து கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

 மேலும், அந்நிறுவனத்தின் 58 வங்கிக் கணக்குகளை முடக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை தெரிவிக்கும் வேளையில் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதவான் பின்வரும் உத்தரவை பிறப்பித்தார்.

 சம்பத் சந்தருவன், அதுல இந்திக்க சம்பத், கயாஷான் அபேரத்ன, மதுரங்க பிரசன்ன, சாரங்க ரந்திக மற்றும் தனஞ்சய கயான் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், இந்த நிறுவனத்தின் மூலம் பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான கணக்குகளும் பதிவாகி வருவதாகவும் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

 இதன்படி, வங்கிச் சட்டத்தின் பிரிவு 83 (c) (1) மற்றும் பணமோசடிச் சட்டத்தின் எண் 3 ஆகியவற்றின் கீழ் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4