தேவையற்ற இறக்குமதியை கட்டுப்படுத்துங்கள் - பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

#SriLanka
Prathees
2 years ago
தேவையற்ற இறக்குமதியை கட்டுப்படுத்துங்கள் - பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

கோரிக்கை நாட்டிற்குள் பாயும் தேவையற்ற இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் ஏதாவது ஒரு வகையில் தலையிட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 ஏற்றுமதி துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவிக்கையில், ஏற்றுமதியை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 இதேவேளை, 300 அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4