நீர் கட்டணமும் உயர்கிறது - அமைச்சரவை பத்திரம் தாக்கல்!

#SriLanka
Thamilini
2 years ago
நீர் கட்டணமும் உயர்கிறது - அமைச்சரவை பத்திரம் தாக்கல்!

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

 நீர்க் கட்டணத் திருத்தத்தைத் தயாரிப்பதில், நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுதல் மற்றும் வாரியத்தின் கடனைச் செலுத்துதல் ஆகிய இரண்டு முறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அமைச்சரவை பத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

 இந்த நீர் கட்டண திருத்தத்தை விரைவில் அமுல்படுத்தி மாதாந்தம் ஏழு பில்லியன் ரூபா வருமானத்தைப் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நீர் வழங்கள் சபை கூறியுள்ளது. 

மின்சாரக் கட்டண உயர்வுடன் ஒரு யூனிட் தண்ணீரின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், குடிநீர் கட்டணத்தை திருத்த வேண்டும் என்றும் வாரியம் குறிப்பிடுகிறது. 

இதேவேளை, நீர் கட்டண கொள்கை மற்றும் நீர் கட்டண சூத்திரம் தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கோரப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4