போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறிய சுகாதார அமைச்சரின் அலுவலகம்!

#Lanka4
Thamilini
2 years ago
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறிய சுகாதார அமைச்சரின் அலுவலகம்!

சுகாதார அமைச்சரின் அலுவலகம் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் படையின் செயற்குழு உறுப்பினரும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இணைய செய்தி சேவையில்இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல்காரர்களைத் தவிர வேறு யாரும் அமைச்சரை சுகாதார அமைச்சில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   

வைத்தியசாலைகளில் கிடைக்கும் தரக்குறைவான மருந்துகளினால் நோயாளர்களின் உயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த அழிவின் அளவை கூறமுடியாது எனவும் ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4