தனக்கு தானே தூக்கிட்டு ஒருவர் தற்கொலை.

#SriLanka #Death #Police #Lanka4 #Investigations
Kanimoli
2 years ago
தனக்கு தானே தூக்கிட்டு ஒருவர் தற்கொலை.

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டம் வாழமளை பிரிவில் , நேற்று மாலை ஒருவர் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறுகையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் கோவிந்தசாமி ஜனகன் வயது 34 திருமணம் முடிக்காத இளைஞர் எனவும், அவரது தந்தை வழங்கிய தகவலின் படி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வை இட்ட போது தூக்கில் தொங்கி மரணித்த நிலையில் அவரது இல்லத்தில் உள்ள தற்காலிக கொட்டிலில் பார்வை இட்ட பின்னர் ஹட்டன் நீதிமன்ற நீதிபதிக்கு அறிவித்ததை தொடர்ந்து நீதவான் உத்தரவின் படி திடீர் மரண விசாரணை அதிகாரி நேரில் வந்து பார்வை இட்ட பின்னர் உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சவச்சாலையில் வைக்க பட்டு உள்ளது

 எனவும் இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம் பெறும் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4