வெளிநாட்டு ஜோடியை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த உயிர்காப்பாளர்

#SriLanka #Death
Prathees
2 years ago
வெளிநாட்டு ஜோடியை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த உயிர்காப்பாளர்

களுத்துறை வடக்கு வஸ்கடுவ கடலில் இன்று (23) பிற்பகல் நீராடச் சென்ற போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய தம்பதியரை மீட்க முற்பட்ட வேளையில் உயிர்காப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய தம்பதி உட்பட 4 பேர் உள்ளூர் இளைஞர்கள் குழுவால் மீட்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை வடக்கு சுமங்கல வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 36 வயதான  தனுஷ்க பிரியதர்ஷன பெரேரா இரண்டு பிள்ளைகளின் தந்தையே கடலில் மூழ்கி இறந்தார்.

 தனுஷ்க பிரியதர்ஷன வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் உயிர்காப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்தவர்.

 ரஷ்யப் பெண் உதவி கேட்டு அலறினார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அங்கு உயிர்காக்கும் காவலாளி திடீரென கடலில் குதித்து நீந்திக் கொண்டிருந்த போது அலையில் அடித்து செல்லப்பட்டார்.

 அப்போது ஹோட்டல் ஊழியர்கள் 2 பேர் கடலில் குதித்ததால் அவர்களும் கடலில் அடித்து செல்லப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4