கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் தாண்டிக்குளம் பகுதியில் கடவையை கடந்த லொறி மீது மோதி விபத்து
#SriLanka
#Accident
#Lanka4
#Train
Kanimoli
2 years ago
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த Intercity AC ரயில். வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயில் கடவையை கடந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் இன்று (23) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் லொறி சாரதியும் மற்றுமொருவரும் படு காயமடைந்துள்ளனர்.
நேற்றையதினம் இந்த ரயில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த போது மீசாலையில் முதியவர் ஒருவர் ரயில் கடவையை கடந்த போது மோதியதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே