சமனல குளத்தில் தண்ணீர் கோரி எம்பிலிப்பிட்டியவில் போராட்டம்..
மகாவலி வளவ பிரதேசத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பலாங்கொட சமனல குளத்தில் இருந்து தேவையான தண்ணீரை பெற்றுத்தருமாறு கோரி அகில இலங்கை விவசாய சம்மேளனம் எம்பிலிப்பிட்டிய நகரில் இன்று போராட்டம் மற்றும் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
எம்பிலிப்பிட்டிய காவந்திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு அருகாமையில் இருந்து எம்பிலிப்பிட்டி பஸ் நிலையம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்னவும் கலந்துகொண்டார்.
கடந்த 4ஆம் திகதி மகாவலி குடியிருப்பு வர்த்தக முகாமையாளர் உள்ளிட்ட குழுவினர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி உடவலவ நீர்த்தேக்கத்தில் பத்து நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், தற்போது நீர் விநியோகம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், சமனலேவ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்கப்பட வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சார சபையின் கீழ் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு சமனல நீர்த்தேக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உடவலவ நீர்த்தேக்கம் மகாவலி அத்தியட்சகரின் கீழ் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக வளவ பிரதேசத்தில் விவசாயம் செய்யாத 86950 குடும்பங்களைச் சேர்ந்த இரு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதும் பிரச்சினையாக உள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே