கடந்த 2002-ம் ஆண்டு முதல் மேற்கு வங்க மாநிலம் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 4,200 பேர் உயிரிழந்துள்ளனர்; மத்திய அரசு தகவல்

#India #Death #Delhi #government #Flood #Died
Mani
1 year ago
கடந்த 2002-ம் ஆண்டு முதல் மேற்கு வங்க மாநிலம் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 4,200 பேர் உயிரிழந்துள்ளனர்; மத்திய அரசு தகவல்

கடந்த 2002-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாக 4,200 க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒரு கேள்விக்கு நேற்று மக்களவையில் பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிஷ்வேஸ்வா துடு, கடந்த 2002-ம் ஆண்டு முதல் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ளத்தால் மொத்தம் ரூ.80,000 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தரவுகளின் அடிப்படையில், கடந்த 2002-ம் ஆண்டு முதல் மேற்கு வங்காளத்தில் 2,722 பேரும் அசாமில் 1500 பேரும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் மேற்கு வங்காளத்தில் ரூ.64,726 கோடியும், அசாமில் ரூ.16,346 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.