குவைத்தில் சிக்கித் தவித்த 62 பேர் மீட்பு!

#SriLanka #Visa
Mayoorikka
2 years ago
குவைத்தில் சிக்கித் தவித்த 62 பேர் மீட்பு!

விசா காலாவதியாகிய நிலையில் குவைத்தில் சிக்கித் தவித்த சுமார் 62 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கென தற்காலிக கடவுச்சீட்டுகளை வழங்கிய குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால் குறித்த குழுவினர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 59 பேர் பெண்கள் மற்றும் மூன்று பேர் ஆண்கள்.

 இந்த குழுவில், வேலை செய்யும் இடத்தில் இருந்து தப்பித்து தூதரகத்தின் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டவர்கள். 

சிலர் பல்வேறு இடங்களில் வேலையில் ஈடுபட்டவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் என குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் கூறியது.

 சுமார் 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்குத் திரும்புவதற்காக தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

 குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 62 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4