ஜனாதிபதி ஆணைப்படி செயற்படுமாறு தமது கட்சி உறுப்பினர்களுக்கு பசில் உத்தரவு

#SriLanka #Basil Rajapaksa #Ranil wickremesinghe
Prathees
2 years ago
ஜனாதிபதி ஆணைப்படி செயற்படுமாறு தமது கட்சி உறுப்பினர்களுக்கு பசில் உத்தரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளிக்காமல் இருக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 தமது கருத்தின்படி ஜனாதிபதி செயற்படாவிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் அர்த்தமில்லை என சுட்டிக்காட்டியுள்ள இக்குழுவினர், இதுவரையில் அமைச்சுப் பதவி கிடைக்காதது குறித்தும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

 எவ்வாறாயினும், அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காமல் இருப்பது பொதுஜன பெரமுன பெரமுனவின் கருத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், ஜனாதிபதி ஆணைப்படி செயற்படுவதால் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அவரது கட்சிக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஆணைக்கு முரணாகச் செல்லும் நிலை ஏற்பட்டால் அது தொடர்பில் அவதானம் செலுத்தி அந்தத் தருணத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4