புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

#SriLanka #Susil Premajayantha #Lanka4
Thamilini
2 years ago
புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  

களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4