காலிமுகத்திடலில் உணவு வர்த்தகர்களை ஒழுங்குபடுத்துவதற்கு முடிவு

#SriLanka #Kegalle #Lanka4 #beach
Kanimoli
2 years ago
காலிமுகத்திடலில் உணவு வர்த்தகர்களை ஒழுங்குபடுத்துவதற்கு முடிவு

காலிமுகத்திடலில் உணவு வர்த்தகர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

 உணவுப்பொருட்கள் அசுத்தமாக இருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் பிரதம பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்தார்.

 எதிர்காலத்தில் கொழும்பு மாநகரசபையின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு மாத்திரமே கல்லுமுதூரை அண்மித்த பகுதிகளில் வர்த்தகம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4